81. விடுதலை வேண்டும். | |
ராகம்-நாட்டை பல்லவி வேண்டுமடி எப்போதும் விடுதலை அம்மா! சரணங்கள் தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல் சூழ நின்ற தீவி லங்கு சோதி வானவர் ஈண்டு நமது தோழ ராகி எம்மொ டமுத முண்டுகலவ நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடு மின்ப மனைத்தும் உதவ (வேண்டுமடி) விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே, விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே, பொருத்த முறநல் வேத மோர்ந்து பொய்மை தீர மெய்மை நேர வருத்த மழிய வறுமை யொழிய வையம் முழுதும வண்மை பொழிய (வேண்டுமடி) பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம் பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே, நண்ணி யமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள வண்ண மினிய தேவ மகளிர் மருவ நாமும் உவகை துள்ள (வேண்டுமடி) | |
ADVERTISEMENTS
| |
மனதி லுறுதி வேண்டும். வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும். பெண் விடுதலை வேண்டும். பெரிய கடவுள் காக்க வேண்டும்; மண்பயனுற வேண்டும், வாகனமிங்கு தென்பட வேண்டும். உண்மை நின்றிட வேண்டும். ஓம் ஓம் ஓம் ஓம். | |
கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட மாட்டாவோ?-அட மண்ணில் தெரியுது வானம்,அதுநம் வசப்பட லாகாதோ? எண்ணி யெண்ணிப் பல நாளு முயன்றிங் கிறுதியிற் சோர்வோமோ, விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு பராசக்தியே! என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள் எத்தனை மேன்மைகளோ! தன்னை வென்றா லவை யாவும் பெறுவது சத்திய மாகுமென்றே முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள் முற்றுமுணர்ந்த பின்னும் தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு தாழ்வுற்று நிற்போமோ? | |
ADVERTISEMENTS
| |
ராகம்-சக்ரவாகம் தாளம்-ஆதி காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா) சரணங்கள்வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்ல வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்யித் துதிக்கிறேன்-ஆதி மூலா வென்றுகதறிய யானையயைக் காக்கவே-நின்தன் முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ,கெட்ட மூடனே? அட-(காலா) ஆலால முண்டவனடி சரணென் றமார்க்கண்டன்-தன தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்-இங்கு நாலாயிரம் காதம் விட்டகல்!உனை விதிக்கிறேன்-ஹரி நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட (காலா)* ‘சுதேசமித்திரன்’ வருஷ அநுபந்தம் 1919-ல் வெளி வந்த முழுப் பாட்டு. | |
ராகம்-காம்போதி தாளம்-ஆதி உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ? மாயையே!-மனத் திண்மையுள்ளாரை நீ செய்வது மொன்றுண்டோ!-மாயையே! எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும் மாயையே! நீ சித்தத் தெளிவெனுந் தீயின்முன் நிற்பாயோ?-மாயையே! என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய் கெட்ட மாயையே!-நான் உன்னைக் கெடுப்ப துறுதியென் றேயுணர் மாயையே! சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு மாயையே!-இந்தத் தேகம் பொய் யென்றுணர் துரரை யென் செய்வாய் மாயையே! இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப மாயையே!-தெளிந் தொருமை கண்டோர் முன்னம் ஓடாது நிற்பையோ?-மாயையே! நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ மாயையே-சிங்கம் நாய்தரக் கொள்ளுமோ நல்லர சாட்சியை-மாயையே! என்னிச்சை கொண்டுனை யெற்றிவிட வல்லேன் மாயையே!-இனி உன்னிச்சை கொண்டெனக் கொன்றும் வராது காண்-மாயையே! யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே!-உன்தன் போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன் உன்னை-மாயையே! | |
ADVERTISEMENTS
| |
செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார் பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம் பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்! இத்தரை மீதினி லேயிந்த நாளினில் இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச் சுத்த அறிவு நிலையிற் களிப்பவர் தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்! பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு, புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே ஐயுற லின்றிக் களித்திருப்பாரவர் ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்! மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும் மண்ணெனக் கொண்டு மயக்கற்றிருந்தாரே, செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார் சித்தர்க ளாமென்றிங் கூதேடா சங்கம்! |