1. தோத்திர பாடல்கள் | |
1. விநாயகர் நான்மணி மாலை | |
வரமே நமக்கிது கண்டீர் கவலையும் வஞ்சனையும் கரவும் புலைமை விருப்பமும் ஐயமும காய்ந்தெறிந்து, ‘சிரமீது எங்கள் கணபதி தாள்மலர் சேர்த்தெமக்குத் தரமேகொல் வானவர்’எனறுளத் தேகளி சார்ந்ததுவே | |
14 | |
ADVERTISEMENTS
| |
விருத்தம் | |
சார்ந்து நிற்பாய் எனதுளமே, சலமும் கரவும் சஞ்சலமும் பேர்ந்து பரம சிவாநந்தப் பேற்றை நாடி நாள்தோறும் ஆர்ந்த வேதப் பொருள்காட்டும் ஐயன்,சக்தி தலைப்பிள்ளை, கூர்ந்த இடர்கள் போக்கிடுநங் கோமான் பாதக் குளிர்நிழலே | |
15 | |
ADVERTISEMENTS
| |
அகவல் | |
நிழலினும் வெயிலினும் நேர்ந்தநற் றுணையாய்த் தழலினும் புனலினும் அபாயந் தவிர்த்து மண்ணினும் காற்றினும் பானினும் எனக்குப் பகைமை யொன்றின்றிப் பயந்தவிர்த் தாள்வான், | |
5 | |
ADVERTISEMENTS
| |
மெளன வாயும் வரந்தரு கையும், உடையநம் பெருமான் உணர்விலே நிற்பான், ஓமெனும் நிலையில் ஒளியாத் திகழ்வான், வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த பிருஹஸ் பதியும் பிரமனும் யாவும் | |
10 |