1. தோத்திர பாடல்கள் | |
1. விநாயகர் நான்மணி மாலை | |
பணிந்தவ னுருவிலே பாவனை நாட்டி, ஓமெனும் பொருளை உளத்திலே நிறுத்தி, சக்தியைக் காக்குந் தந்திரம் பயின்று யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய், யார்க்கும் அன்பனாய்,யார்க்கும் இனியனாய், | |
10 | |
ADVERTISEMENTS
| |
வாழ்ந்திடட விரும்பினேன்;மனமே!நீயதை ஆழ்ந்து கருதிஆய்ந் தாய்ந்து பலமுறை சூழ்ந்து, தெளிந்து, பின் சூழ்ந்தார்க் கெல்லாம் கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து, தேறித் தேறிநான் சித்திபெற் றிடவே. | |
15 | |
நின்னா லியன்ற துணைபுரி வாயேல், பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன்; மனமே!எனைநீ வாழ்வித் திடுவாய்! வீணே யுழலுதல் வேண்டா, சக்தி குமாரன் சரண்புகழ் வாயே! | |
20 | |
ADVERTISEMENTS
| |
வெண்பா | |
புகழ்வோம் கணபதிநின் பொற்கழலை நாளும் திகழ்வோம் பெருங்கீர்த்தி சேர்ந்தே-இகழ்வோமே புல்லரக்கப் பாதகரின் பொய்யெலாம்;ஈங்கிதுகாண் வல்லபைகோன் தந்த வரம். | |
13 | |
ADVERTISEMENTS
| |
கலித்துறை |