1. தோத்திர பாடல்கள் | |
1. விநாயகர் நான்மணி மாலை | |
கடமை யாவன; தன்னைக் கட்டுதல் பிறர்துயர் தீர்த்தல்,பிறர் நலம் வேண்டுதல் வீநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய், நாரா யணனாய், நதிச்சடை முடியனாய் பிறநாட் டிருப்போர் பெயர்பல கூறி, | |
5 | |
ADVERTISEMENTS
| |
அல்லா!யெஹோவா!எனத்தொழு தன்புறும் தேவருந் தானாய்,திருமகள்,பாரதி, உமையெனுந் தேவியர் உகந்தவான் பொருளாய், உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல், | |
10 | |
இந்நான் கேயிப் பூமி லெவாக்கும் கடமை யெனப்படும்;பயனிதில் நான்காம்; அறம்;பொருள்,இன்பம்,வீடெனு முறையே, தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய், மணக்குள விநாயகா!வான்மறைத் தலைவா! தனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில். | |
15 | |
ADVERTISEMENTS
| |
எல்லாப் பயன்களும் தாமே எய்தும், அசையா நெஞ்சம் அருள்வாய்; உயிரெலாம் இன்புற் றிருக்க வேண்டிநி இருதாள் பணிவதே தொழிலெனக் கொண்டு கணபதி தேவா! வாழ்வேன் களித்தே. | |
20 | |
வெண்பா | |
ADVERTISEMENTS
| |
களியுற்று நின்று கடவுளே!இங்குப் பழியற்று வாழ்ந்திடக்கண் பார்ப்பாய்-ஒளிபெற்றுக் கல்வி பலதேர்ந்து கடமையெலாம் நன்காற்றித் தொல்விக்கட் டெல்லாம் துறந்து. |