1. தோத்திர பாடல்கள் | |
1. விநாயகர் நான்மணி மாலை | |
அகவல் | |
ADVERTISEMENTS
| |
கற்பக விநாயகக் கடவுளே,போற்றி! சிற்பர மோனத் தேவன் வாழ்க! வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க! ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க! படைப்புக் கிறையவன், பண்ணவர் நாயகன் | |
5 | |
இந்திர குரு,எனதுஇதயத் தொளிர்வான் சந்திர மவுலித் தலைவன் மைந்தன் கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்; குணமதிற் பலவாம்;கூறக் கேளீர்! உட்செவி திறக்கும்;அகக்கண் ஒளிதரும்; | |
10 | |
ADVERTISEMENTS
| |
அக்கினி தோன்றும்;ஆண்மை வலியுறும்; திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம். கட்செவி தன்னைக் கையிலே யெடுக்கலாம் விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும் துக்கமென் றென்ணித் துயரிலா திங்கு | |
15 | |
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற் றோங்கலாம்; அச்சந் தீரும்,அமுதம் விளையும்; வித்தை வளரும்;வேள்வி ஓங்கும்; அமரத் தன்மை எய்தவும் இங்கு நாம் பெறலாம்;இஃதுணர் வீரே. | |
20 | |
ADVERTISEMENTS
| |
வெண்பா |