1. பாரத நாடு | |
1. வந்தே மாதரம் தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு | |
ராகம்-நாதநாமக்கிரியை பல்லவி | |
தாளம்-ஆதி | |
ADVERTISEMENTS
| |
வந்தே மாதரம் என்போம்-எங்கள் மாநிலத் தாயை வணங்குதல் என்போம். | |
(வந்தே) | |
சரணங்கள் | |
ADVERTISEMENTS
| |
ஜாதி மதங்களைப் பாரோம்- உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே- அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே | |
(வந்தே) | |
ஈனப் பறையர்க ளேனும்-அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ? சீனத்த ராய்விடு வாரோ?-பிற தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? | |
(வந்தே) | |
ADVERTISEMENTS
| |
ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில் அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள் சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ? | |
(வந்தே) |