1. தோத்திர பாடல்கள் | |
1. விநாயகர் நான்மணி மாலை | |
வெண்பா | |
ADVERTISEMENTS
| |
(சக்தி பெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினம் சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா-அத்தனே! (நின்)தனக்குக் காப்புரைப்பார்;நின்மீது செய்யும் நூல் இன்றிதற்கும் காப்புநீ யே. | |
1 | |
கலித்துறை | |
ADVERTISEMENTS
| |
நீயே சரணம் நினதரு ளேசர ணஞ்சரணம் நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்; வாயே திறவாத மெனத் திருந்துன் மலரடிக்குத் தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே. | |
2 | |
விருத்தம் | |
ADVERTISEMENTS
| |
செய்யுந் தொழிலுன் தொழிலேகாண் சீர்பெற் றிடநீ அருள்செய் வாய். வையந் தனையும் வெளியினையும் வானத்தையும்முன் படைத்தவனே! ஐயா!நான்மு கப்பிரமா! யானை முகனே!வாணிதனைக் கையா லணைத்துக் காப்பவனே! கமலா சனத்துக் கற்பகமே! | |
3 |